Primary tabs

முன்பு ஒரு பயனை விரும்பி ஒரு செயல் செய்யப்படுகிறது; ஆனால் அப்பயன்
கிட்டவில்லை. பின்னர் அச்செயலால் அல்லாமல், வேறொரு செயலால் அப்பயன் தானே
கிட்டுவதாகக் கூறி முடிப்பது சமாகிதம் என்னும் அணி ஆகும்.
வெருவிய வெற்பு அரையன் பாவை - பெருமான் அணி ஆகம் ஆரத் தழுவினாள், தான்முன்
தணியாத ஊடல் தணிந்து
வெருவிய = அஞ்சிய; வெற்பு = மலை; அரையன் = அரசன்;
பாவை = பார்வதி; பெருமான் = சிவபெருமான்; ஆகம் - மார்பு.)
பாடலின் பொருள்
பார்வதி கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஊடல் கொண்டாள், சிவன் எவ்வளவோ முயன்றும் அவளுடைய ஊடல் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை இராவணன் பெயர்த்து எடுத்தான், அதனால் ஏற்பட்ட நடுக்கத்தினால் அஞ்சிய பார்வதி தான் முன்பு தணியாத ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவிக் கொண்டாள்.
. அணிப்பொருத்தம்