Primary tabs

மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்
என்ற நூற்பாவால் அறியலாம்.
அவநுதி என்பதற்கு மறுத்துரைத்தல் என்று பொருள்.
உண்மை - ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மை. ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத்
தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பது அவநுதி
ஆகும். இவ்வாறு உண்மையை மறுத்துப் பிறிது ஒன்று உரைக்குங்கால் அப்பொருளுக்குச்
சிறப்புத் தோன்றுமாறு அமையும்.
. அவநுதி அணியின் வகைகள்
அவநுதி அணி மூன்று வகைப்படும்.
அவை சிறப்பு அவநுதி, பொருள் அவநுதி, குண அவநுதி என்பனவாம். இவற்றுள்
சிறப்பு அவநுதியைப் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு
நிறையும் நிலைதளரா நீர்மை - அறநெறிசூழ்
செங்கோலன் அல்லன் கொடுங்கோலன்
நாண் - நாணம், வெட்கம்; நிறை - கற்பு; தெவ் - பகைவர்;
அடு - அழிக்கும்; மால் = பெரிய.)
போர்க்களத்தில் பகைவர்களை அழித்த கொடிய கோபத்தை உடைய பெரிய யானைக்கு உரிய அரசன், தனது நறுமணம் கமழும் மாலையை விரும்பிய பெண்களுடைய அழகும், அணிகலனும், நாணும், நிறையும் நிலை தளராதபடி தாங்கும் அறநெறி பொருந்திய செங்கோலை உடையவன் அல்லன்; கொடுங்கோலை உடையவன் ஆவான்.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், அரசனைச் சிறப்பித்துக் கூறும்போது, அவனுக்குச் சிறப்பாக உள்ள தன்மையாகிய செங்கோன்மையை மறுத்துக் கொடுங்கோன்மை என்ற பிறிது ஒரு தன்மையை அவன் மீது ஏற்றிச் சொல்லியிருத்தலின், இது சிறப்பு அவநுதி ஆயிற்று. அரசன் தனது மாலையை விரும்பும் பெண்களுக்குக் கொடுங்கோலன் ஆவான் என்று கூறப்பட்டிருப்பதால் அவன் தன் மனைவியை அன்றிப் பிற மகளிரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்படுகிறது. இது அவனுடைய சிறப்பைக் காட்டலின் சிறப்பு அவநுதி ஆயிற்று.