Primary tabs
உலகில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கூறுவதும் பாராட்டிக் கூறுவதும் இயல்பு.
இவ்வாறு கூறுவதில் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் மகிழ்ச்சி சிறக்கிறது.
மகிழ்ச்சி நிறைந்த உலகைக் காண்பதே கவிஞர்களின் நோக்கம். எனவே வாழ்த்திக்
கூறும் மகிழ்ச்சிப் பொருளையே தனி ஓர் அணியாகத் தண்டி ஆசிரியர் கூறினார்
எனலாம்.

முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப
கிளத்தல் - விதந்து கூறுதல் அஃதாவது சிறப்பித்துக் கூறுதல்.)
எடுத்துக்காட்டு
ஆவாழி! வாழி அருமறையோர்! - காவிரிநாட்டு
அண்ணல் அனபாயன் வாழி! அவன்குடைக்கீழ்
மண்உலகில் வாழி மழை!
முனி - அகத்திய முனிவர்; ஆ - பசு; அண்ணல் - தலைவன்.)
இப்பாடலின் பொருள்
அழியாத தமிழ் தோற்றுவித்த பழைமையான நூல்களைக் கற்றுணர்ந்த அகத்திய முனிவர் வாழ்க! பசுக்கள் வாழ்க! அரிய வேதங்களைக் (தமிழ் மறைகளைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்க! காவிரியாறு பாய்கின்ற சோழ நாட்டுத் தலைவனாகிய அனபாயன் வாழ்க! அவனுடைய அரசாட்சிக்கு உட்பட்ட இவ்வுலகில் மழை வாழ்க!
. அணிப்பொருத்தம்