Primary tabs
6.6 உலா
இலக்கிய வகைமையின் வளர்ச்சி
- (தொல்காப்பியம்-1031)
எனும் தொல்காப்பிய
நூற்பா, உலா இலக்கியத்தைப் பற்றிக்
குறிப்பிடுவதாகக் கூறுவர்.
தமிழ்க் காப்பியங்களில் தலைவன் உலாவரும் செய்திகள்
உண்டு.
ஐந்து வயது முதல் நாற்பது வயதுவரை உள்ள பெண்கள்
உலா வரும் தலைமகனைக் கண்டு காதல் கொள்ளுவதாகப்
பாடும் மரபு உண்டு.
முத்தொள்ளாயிரம்
எனும் இலக்கியம் உலா
இலக்கியத்தின் தோற்றத்தினை அழகாகக்
காட்டுகிறது.
வெளியே அழகன் உலாச் செல்வது, தம் இல்ல மகளிருக்குத்
தெரிந்து விடக்கூடாது என நினைத்து, தாய்மாரெல்லாம் தத்தம்
வீட்டுக்கதவினை அடைத்துத் தாழிட, மகளிர் திறந்து அவனை
நோக்கக் கதவின் குடுமி தேய்ந்தது என அவ்விலக்கியம் பாடுகிறது .
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு.
6.6.2
உலா இலக்கியங்கள்
சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கயிலாய
ஞான உலா, ஆதி உலா என அழைக்கப் பெறும் சிறப்புக்கு
உரியது. தெய்வ உலா என அழைக்கப்
பெறும் இவ்வுலாவே
காலத்தால் முற்பட்டது.
சிவலோகத்தில் பக்தர்கள் இறைவனிடம்
வேண்டிக்
கொண்டபடி, சிவபெருமான் உலா வந்து
அவர்களை
மகிழ்விப்பதாய் இவ்வுலா கூறுகிறது.
கி.பி.11ஆம் நூற்றாண்டில்
திருஞான சம்பந்தர் மீது,
நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய
பிள்ளையார்
திருவுலா மாலை புகழ்மிக்கது.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்
ஒட்டக்கூத்தர் இயற்றிய
மூவருலா குறிப்பிடத்தக்கது.
பிற உலாக்கள்
எண்
சுவாமிகள்
சண்முகர்உலா
சிவாச்சாரியார்
உலா
புலவர்
தேசிகர்
புலவர்
தஞ்சைப் பெருவுடையார்
உலா
தேசிகர்
மணிவண்ணன் உலா