Primary tabs
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விவசாயக் குடும்பத்தில்
பிறந்தவர். கல்வி அதிகம் பயிலாதவர்.
உழைப்பாளர்களையும், தொழிலாளர்களையும் கவிதையின் பாடு
பொருளாக்கியவர்; ஏழை x பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு
மாறப் பாடியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால்
விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு எழுதியவர்.
பொதுவுடைமை விரும்பி; வர்க்க எதிர்ப்பாளர்; பெரியார்
ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாடலில்
பாடியவர்; மூட நம்பிக்கைகளைச் சாடியவர்; சாதி ஏற்றத்தாழ்வு
கூடாது எனப் பாடியவர்.
திரைப்படத்தைத் தம்முடைய கருத்துக்களைச் சொல்ல
ஊடகமாகப் பயன்படுத்தியவர்; நல்ல இலக்கியப்
படைப்பாளர். இக்கருத்துகளை இப்பாடத்தின் மூலம் அறிந்து
கொள்ளலாம் .