தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20222l5-6.4 தொகுப்புரை

6.4 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை வைணவத் தத்துவம் பற்றிய
செய்திகளை அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

1)
வைணவம் குறிப்பிடும் இருபத்தாறு தத்துவங்கள் எவை
எவை என்பது பற்றியும் அவை சித்து, அசித்து,
ஈசுவரன் என்னும் முப்பொருள்களாக
வகைப்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் அறிந்து
கொண்டீர்கள்.
2)
சித்து முதலிய மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல்
எக்காலத்தும் கூடியுள்ள நிலையினை உடல் -
உயிர்க்கொள்கை
மூலம் வைணவம் நிறுவுகின்றது
என்னும் உண்மையையும் நீங்கள் விளங்கிக்
கொண்டிருப்பீர்கள்.
3)
இக்கொள்கையினை ஒட்டியே வைணவக்கோட்பாடு
விசிட்டாத்வைதம் எனப்பெயர் பெற்றது என்பதையும்
அறிந்திருப்பீர்கள்.
4)
இத்தத்துவத்தோடு மேலும் சில கோட்பாடுகள் வைணவ
சம்பிரதாயத்தில் வழக்கில் உள்ளன. அவற்றுள்
முக்கியமானவை அர்த்தபஞ்சகம் ரஹஸ்யத்திரயம்
(மூன்று மந்திரங்கள்) முதலியன என்பதையும் நீங்கள்
விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.

1.
அர்த்தபஞ்சகம் என்று வைணவம் குறிப்பிடும் ஐம்பொருள்கள் யாவை?
2.
தனியன் என்றால் என்ன? விளக்குக.
3.
துவயம் என்றால் என்ன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:12:27(இந்திய நேரம்)