Primary tabs
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிய காலம் முதல் இன்று
வரை பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது. பிரதாப
முதலியார் சரித்திரம் காலம் முதல் பின்நவீனத்துவக் காலம்
வரை தமிழ் நாவலின் போக்குகளில் அடைந்த மாற்றங்களை
இப்பாடத்தில் நாம் கண்டோம்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஆண்களால்
அடக்கப்படும்
பெண்கள் பற்றிச் சமீப கால நாவல்கள் நிறைய
சொல்லத்
தொடங்கியுள்ளன. இவ்வகையில் பெண்ணிய நாவல்களும்
தலித்திய
நாவல்களும் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டன.
அவை
வெகு மக்களின் வாசிப்புக்கும் பெருமளவில்
உள்ளாயின.
கதை
சொல்லும் முறையால் அநியாயத்தையும்
நியாயப்படுத்திவிட முடியும். இத்தகு சூழலில் காலவரிசையில்
ஒரு கதை சொல்வதைத் தவிர்க்க பின் நவீனத்துவம் முன்
வந்தது.
இன்னும் எதிர்காலத்தில் தமிழ் நாவல்கள் புதிய
வடிவங்களில், புதிய செய்திகளுடன் நிறைய
வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.