Primary tabs
5.2 பெயரெச்சம் - விளக்கம்
பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச்சொல்
'பெயரெச்சம்' எனப்படும். அது வினைப்பகுதி, காலம்காட்டும்
இடைநிலை, பெயரெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய்
அமையும். பெயரெச்சம் காலமும் செயலும் காட்டும்.
5.2.1 பெயரெச்ச வடிவங்கள்
பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும்
மூன்று வடிவங்களில் அமையும். இவ்வடிவங்களை
‘வாய்பாடுகள்’ என்பர்.
‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும்.
‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு
எதிர்காலம் காட்டும்.
இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர்
காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூல்
காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறி்க்கத் தொடங்கியது.
5.2.2 பெயரெச்சம் காலம் காட்டும் முறை
என்னும் இடைநிலைகளால் இறந்த காலத்தை உணர்த்தும்.
‘ஆநின்று’ என்னும் இடைநிலைகளால் நிகழ்காலத்தைக்
காட்டும். இவற்றுள் ‘ஆநின்று’ இடைநிலை இன்றைய
வழக்கில் இல்லை.
விகுதியால் எதிர்காலத்தை உணர்த்தும்.
5.2.3 பெயரெச்சம் கொண்டுமுடியும் பெயர்கள்
பெயரெச்சம், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்,
செயப்படுபொருள் ஆகிய அறுவகைப் பெயர்களுள்
ஏதேனும் ஒன்றினைக் கொண்டு முடியும்.
(எ.கா)
(1) செய்பவன் - உண்ட சாத்தன், பாடும் புலவன்
(2) கருவி - உண்ட தட்டு, வெட்டும் வாள்
(3) நிலம் - உண்ட அறை, வாழும் இல்
(4) செயல் - உண்ட ஊண், வாழும் வாழ்க்கை
(5) காலம் - உண்ட நாள், துயிலும் காலம்
(6) செயப்படுபொருள் - உண்ட சோறு, கற்கும் நூல்
( ஊண் = உணவு; இங்கு உண்ட செயல் எனப் பொருள் தரும்.)
5.2.4 பெயரெச்சம் மூவிடங்களிலும் இடம்பெறுதல்
பெயரெச்சம், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய
மூவிடங்களுக்கும் இருதிணை, ஐம்பாலுக்கும் பொதுவாக வரும்.
- 'படித்த' என்னும் பெயரெச்சம், அறுவகைப் பெயர்களைக்
கொண்டு முடிவதற்குச் சான்று கூறிப் பழகுக. - 'பார்த்த' என்னும் பெயரெச்சம், இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களிலும் இடம்பெறுவதற்குச் சான்று தருக.