Primary tabs
தன் மதிப்பீடு -
II : விடைகள்
பாங்கி வெளிப்படுத்தும் மூவகைப் புணர்ச்சிகள் யாவை?
செவிலியிடம் அறத்தொடு நிற்கும்
பாங்கி, தலைவியின்
காதல் மலர்ந்து களவு ஒழுக்கம் நிகழ்ந்ததற்கான இயல்பான
சூழ்நிலைகளாக மூவகைப் புணர்ச்சிகளைக்
குறித்துச்
சொல்வாள். அவை யாவன:
1) பூத்தரு
புணர்ச்சி : தலைமகன் தலைவியின்
கூந்தலில்
மலர்க் கொத்தைச்
சூட, அவனையே தலைவனாகத்
தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.
(2) புனல்
தரு புணர்ச்சி : தலைவி ஆற்று வெள்ளத்தில்
மகிழ்ந்து நீராட, அப்போது
நிகழ்ந்த இடையூற்றில்
இருந்து மீட்ட ஆடவனையே
தனக்குரிய காதல்
தலைவனாகக் கொள்ளுதல்.
(3) களிறு தரு புணர்ச்சி : தலைவி
தினைப் புனம் காவல்
புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின்
தாக்குதலில்
இருந்து தன்னைக்
காத்த தலைவனையே
தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.