தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம்


வீரமா முனிவர்
சரித்திரச் சுருக்கம்.

ஐரோப்பா கண்டத்திலுள்ள இத்தாலியா தேசத்தி லிருக்கும் காஸ்தி கிலியோனே என்னும் ஊரானது ஓங்கு புகழ் பெற்ற தொன்னூ லியற் றிய வீரமாமுனிவர் பிறப்பிடமாம். 1680-u நவம்பர்-t 8-s அவருக்கு ஜெந்மவார மாயிற்று. அவரைப் பெற்றோர் அவருக்குக் கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி யெனப் பெயரிட்டார்கள். அவர் அவ்வூரிலும் உரோமாபுரியிலும் கல்விகற்று, இயேசுவின் சங்கத்தை யனுசரித்து, உரோமைச் சங்க வொழுங்குபடி நடந்து வந்ததினால், அவரது தெய்வபக்தி, கல்வி, சாதூரியம் முதலியவற்றைக் கேள்வியுற்ற பாப்பானவர் அவரதுசாமர்த்தியத்துக்கு வியந்து, தென்னிந்தியாவிலுள்ள மதுரைமா நாட்டுக்குப்போய் சற்குருவாகிய இயேசுவின் மாட்சிமையை அவ்விராச்சியத்தாருக்குத் தெரிவிக்க அவரை நியமித்தார். ஆனால் உரோமைச் சங்க முறைமையின்படி இருபத்தைந்து வயதாகுமுன் இவர் குருபட்டம் பெறுவது கூடாதாதலால் 1706-ம் வருஷத்தில் அவர் அப்பட்டம் பெற்று, இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள கோவா வென்னும் ஊரை யடைந்து தமிழ்ப் பாஷை பயின்று, 1708-ம் வருஷத்தில் திருநெல்வேலிக்குச் சென்றார். அங்குள்ள காமயாநாயகன்பட்டி யென்னும் ஊரில் 1714-ம் ஆண்டு முதல் 1716-ம் ஆண்டுவரையில் வசித்ததாகவும், இங்கிருந்து, கைத்தார் என்னுங் கிராமத்துக்கு அடிக்கடி போக்கு வரவு செய்து வந்ததாகவும், திருநெல்வேலியில் 1714-ம் ஆண்டில் வடகன் குளம் சபையை ஸ்தாபித்த பிராண்டலீனி யென்னுந் தேசிகர் சொல்லுகிறார். பாளையங் கோட்டையி லிருந்து மதுரைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ள இவ்வூரானது அக்காலத்தில் மிகவும் பேர்பெற்றிருந்தது. சங்கரநயனார்கோவில் தாலுக்காவிற் கல்பட்டி யென்னுங் கிராமத்தில் அவர் தாம் செய்த தேவ ஊழியத்திற் செயம் பெற்றது கொண்டு அங்கொரு தேவாலயங் கட்டினார். இதி னிமித்தம் அங்குள்ள பிராமணர்கள் கோபங்கொண்டு இவரைப் பிடித்துச் சிறைச்சாலையில் வைத்துக் கோயிலையும் இடித்து விட்டார்கள்.

அந்தக்கிராமத்துப்பிராமணர்கள் தங்கள் முன்னோர் பாழாக்கிய மேற்சொன்ன தேவாலயத்தி னடையாளங்களைத் தற்காலத்தில் நமக்குக் காண்பிப்பதுடன் அது பெஸ்கி என்பவர் கட்டி வைத்த தென்றும், அவரையும், அவரால் கிறிஸ்தவனான வோர் பிராமணனையும், அவ்வூரி லிருந்து தங்கள் முன்னோர் அடித்துத் துரத்தி விட்டார்கள் என்றுஞ் சொல்லுவார்கள். அக்காலத்தி லிருந்த பிராமணர்கள் மிகவும் மத வைராக்கியமுள்ளவர்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 16:47:58(இந்திய நேரம்)