Primary tabs
பிரபந்த தீபிகை
[சென்ற நூற்றாண்டில் முத்து வேங்கடசுப்பையர் என்பவரால்
இயற்றப்பட்ட இந்நூல் வேப்பத்தூர்
பி. பாஸ்கர ஐயர் அவர்களால்
செந்தமிழில் (1918-19) வெளியிடப்பெற்றது.
பொருள் புலப்படவேண்டிச் சொற்பிரித்து எழுதப்பட்டுள்ளது.]
தற்சிறப்புப்பாயிரம்
‘மதிநாக நதிவேணி யன்சுதனை அஞ்ஞான
மத அந்தகாரதீப
மயமான போதம்அருள் தேசிகக் கடவுள்இரு
மலரடி வழுத்தல் செய்வாம்
பதினாறை ஆறில்பெருக்கு பிரபந்தாதி
பலவகை எடுத்துரைக்கின்
பாரில் வருணம்நாலின் அந்தகன் செவிடு ஊமை
பாஷண்டி அலி உலோபன்
அதிபாலன் அங்கஈனன் முதியரைத் தள்ளி
அருள் உதாரன் குலீனன்
அர்த்தமுளன் விற்பன சலட்சணன் புலவர்தமிழ்
அருமைகண்டு ஈகுவோர்பால்
இதமான பத்துப் பொருத்தமும் இலக்கண
இலக்கியப் பொருள் சிறக்க
இசைபெற உரைப்பென் என் சிற்றறிவினால் சொல்லும்
இன்சொல்
தழைக்க என்றே.’