தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கடுவன் இளமள்ளனார்


கடுவன் இளமள்ளனார்

150. மருதம்
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்:
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
5
மன் எயில் உடையோர் போல, அஃது யாம்
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
10
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:18:13(இந்திய நேரம்)