தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கருவூர்க் கோசனார்


கருவூர்க் கோசனார்

214. பாலை
'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்' என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
'அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
5
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என,
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ-தோழி!-தோள
10
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது.-கருவூர்க் கோசனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:19:25(இந்திய நேரம்)