ஆறிருகை - பன்னிரண்டு கையிடத்தும்
        
        
       
      
        
          ஆறு - செவிதோல் கண் நாமூக்கு மனம்
                    
          ஆகிய ஞானேந்திரியம்
        
        
       
      
        
          ஆறுசெல்வளி - இயங்குங் காற்று
        
        
       
      
      
      
      
      
        
          ஆற்றுப்படுத்த - வழிப்படுத்தின
        
        
       
      
      
      
      
      
        
          இகந்தாளை - நீங்கிய தேவசேனையை
        
        
       
      
      
      
      
      
      
      
      
        
          இடவல - இடமும் வலமும் ஆயினோய்
        
        
       
      
      
      
      
      
      
        
          இட்டார்க்கு - பொருள்கொடுப்பார்க்கு
        
        
       
      
      
      
      
        
          இணைப்பிணையல் - இரண்டனைப் பிணைத்தது
        
        
       
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
        
          இயல்பிற்று - தன்மையுடையது
        
        
       
      
        
          இயற்புலவ - இயலறிந்த புலவனே
        
        
       
      
      
      
      
      
      
      
        
          இரவிருள் பகலாக - இரவினும் பகலினும்
        
        
       
      
      
      
        
          இருங்குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை
        
        
       
      
      
      
      
      
      
      
      
        
          இருநிழல் - இரண்டு குடைநிழல்
        
        
       
      
      
        
          இருந்தையூர் - வையைக்கரையிலுள்ள ஒரு
                    
          திருமால் திருப்பதி (ப.தி.)
        
        
       
      
        
          இருபிறப்பு - நூலணிதற்கு முன்னொரு பிறப்பும்
                    
          பின்னொரு பிறப்புமாகிய இருபிறப்பு