தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Invalid argument supplied for foreach() in include() (line 365 of /html/tamilvu/public_html/sites/all/themes/tb_sirate/tpl/page--tamilva-monthly-serial-lecture.tpl.php).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நன்னன் ஆஅய்

நன்னன் ஆஅய்

 

356.மருதம்
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
5
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
பொற் தொடி முன்கை பற்றினனாக,
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
10
கற் போல் நாவினேனாகி, மற்று அது
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
15
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
20
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:41:48(இந்திய நேரம்)