தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஊரும் சேரியும் உடன் இயைந்து

ஊரும் சேரியும் உடன் இயைந்து

 

220. நெய்தல்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
5
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்
10
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
15
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
20
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:47:01(இந்திய நேரம்)