தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விசும்பு தளி பொழிந்து

விசும்பு தளி பொழிந்து

 

345. பாலை
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
5
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
10
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
15
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
20
கல் கண் சீக்கும் அத்தம்,
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:53:04(இந்திய நேரம்)