தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சீர் கெழு வியன் நகர்ச்

சீர் கெழு வியன் நகர்ச்

 

219. பாலை
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப்
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
5
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி,
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
10
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என,
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
15
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்,
நடக்கும்கொல்? என, நோவல் யானே.
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:08:50(இந்திய நேரம்)