தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பொய்கை நீர்நாய்ப்

பொய்கை நீர்நாய்ப்

 

386. மருதம்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
5
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து, நல்ல கூறி,
10
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
நுதலும் கூந்தலும் நீவி,
15
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:33:23(இந்திய நேரம்)