தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சிலை உலாய் நிமிர்ந்த

சிலை உலாய் நிமிர்ந்த
394
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
5
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்!
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை,
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேனாக,
10
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி,
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர்
15
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு,
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும்,
'துன் அரும் பரிசில் தரும்' என,
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.
திணையும் துறையும் அவை.
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:24:11(இந்திய நேரம்)