தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மென்பாலான் உடன் அணைஇ

மென்பாலான் உடன் அணைஇ
384
மென்பாலான் உடன் அணைஇ,
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன்பாலான் கருங் கால் வரகின்
5
......................................................................................
அம் கண் குறு முயல வெருவ, அயல
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;
விழவு இன்றாயினும், உழவர் மண்டை
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;
10
................................................கிணையேம், பெரும!
நெல் என்னா, பொன் என்னா,
கனற்றக் கொண்ட நறவு என்னா,
.....................மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
15
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கி,
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு
20
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறியேனே.
திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:00:57(இந்திய நேரம்)