தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

யானே பெறுக, அவன் தாள் நிழல்

யானே பெறுக, அவன் தாள் நிழல்
379
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நா இசை நுவறல்;
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து,
5
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம்; பெரும!
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர்
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா,
10
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என,
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற,
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது,
விண் தோய் தலைய குன்றம் பின்பட,
......................................ர வந்தனென், யானே
15
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத்
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே.
திணை அது; துறை பரிசில் துறை.
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:02:54(இந்திய நேரம்)