தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆடு (மறி, மடங்கல்)

ஆடு (மறி, மடங்கல்)
197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.
திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

286
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
5
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!
திணை கரந்தை; துறை வேத்தியல்.
ஒளவையார் பாடியது.

366
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக,
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்,
5
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே;
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
.............................உரைப்பக் கேண்மதி:
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
10
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,
இரவின் எல்லை வருவது நாடி,
உரை.....................................................
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு,
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ,
15
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப,
கெடல் அருந் திருவ!
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி,
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
20
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை,
காவுதொறும்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
திணையும் துறையும் அவை.
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.

383
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து,
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி,
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி,
5
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து,
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி,
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
10
கழை படு சொலியின் இழை அணி வாரா,
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி,
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி.....................................
15
.................................................கல் கொண்டு,
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி,
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே;
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி,
நரை முக ஊகமொடு, உகளும், சென................
20
.......................கன்று பல கெழீஇய
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என
ஒருவனை உடையேன்மன்னே, யானே;
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?
திணையும் துறையும் அவை.
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:41:18(இந்திய நேரம்)