தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முதலை (கரா, கராம்)

முதலை (கரா, கராம்)
37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

104
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
5
நுண் பல் கருமம் நினையாது,
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

283
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்
பௌவ உறை அளவா,
..................................................................... வி மயக்கி,
5
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,
மன்றுள் என்பது கெட...
...........................................£னே பாங்கற்கு
10
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க,
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர,
தெற்றிப் பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் நன்று புரப்ப,
.....................................................ண்ட பாசிலைக்
15
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
அடை நெடுங் கல்வியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:58:18(இந்திய நேரம்)