தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai

(6) கிறித்துவிற்குப் பிற்பட்ட நூல்களை அல்லது நிகழ்ச்சிகளைப்பற்றித் திருக்குறளில் யாதொரு குறிப்புமின்மை.

கடைக் கழகச் செய்யுட்களில் கூறப்பெறும் யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது.

தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட தென்பதற்குச் சான்றுகள் : -

(1) தொல்காப்பிய நூற்பாக்களையும் மக்கட் பகுப்பையும் திருவள்ளுவர் தழுவியிருத்தல்.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப".

என்னும் தொல்காப்பிய நூற்பா ( 1434 )

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"

என்னுங் குறளில் (28) தழுவப்பெற்றுள்ளது.

"எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற்
பொற்புடை நெறிமை யின்மை யான."

என்னும் தொல்காப்பிய நூற்பா(981)

"கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."

என்னுங் குறளில் (1137) தழுவப்பெற்றுள்ளது.

"மாவும் மாக்களும் ஐயறி வினவே" ( 1531)
"மக்கள் தாமே ஆறறி வுயிரே (1532)

என்று தொல்காப்பியர் வகுத்ததற்கேற்பவே, திருவள்ளுவரும் மாந்தருட் பண்பட்டவரை மக்கள் என்றும் படாதவரை மாக்கள் என்றும் பிரித்துக் கூறியுள்ளார்.

எ - டு:

"மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்" ( 997)
"மக்களே போல்வர் கயவர்" ( 1071)
"கொலைவினைய ராகிய மாக்கள்" (329)
"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்" (420)

(2) "இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
     னில்லவள் மாணாக் கடை. "(53)

என்னுங் குறளில் வந்துள்ள ஆனால் என்னும் சொல்வடிவம் தொல்காப்பியர் காலச் செய்யுள் நடைக்கு ஏற்காமை.

(3) ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
    ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:05:27(இந்திய நேரம்)