தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai

"நெருந லுளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"  (எதிர்ப்பொருள்)

"காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு"  (சொற்பொருட் பின்வருநிலை)

என்பன பல்வேறு அணியுடையன.

9. நூல்வகை :

கடைக்கழகச் செய்யுட்கள் அல்லது நூல்கள் என்று முதலில் வழங்கியவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமே. திருவள்ளுவர் கழகப்புலவரன்மையாலும், அவர் நூல் கழகத்திலுள்ள பிராமணப் புலவரால் ஒப்புக் கொள்ளப் பெறாமையால் அரங்கேறாதிருந்ததினாலும், அது கழக நூலும் கழக மருவியநூலுமல்லாது தனியாகவேயிருந்து வந்தது. பிற்காலத்திற் கடைக்கழகங் கலைக்கப்பட்டபின், சமணத் தமிழ்க் கழகத்தைச் சேர்ந்த அறநூலாசிரியர் சிலர் தம் நூல்கட்குக் கடைக்கழக நூல் நிலைமை யூட்டல் வேண்டி, கழகக் காலத்தனவும் பிற்காலத்தனவுமான பதினெண் நூல்களை ஒரு தொகுதியாக்கி, அவற்றைப் பதினெண் கீழ்க்கணக்கென்றும் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் பதினெண் மேற்கணக்கென்றும் வழங்கினதாகத் தெரிகின்றது.

திருக்குறள் கழக நூலன்மையாலும், அதற்கு நால் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கே கழகக்காலத்தனவாதலாலும், ஏனையவெல்லாம் வச்சிரநந்தி 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் சமணத் தமிழ்க்கழகம் நிறுவிய பின்னரே எழுந்தவையாதலாலும், அவற்றுள் ஆசாரக்கோவை திருக்குறட்கு நேர்மாறாக வடசொல்லும் ஆரியக்கொள்கையும் மிகுந்திருப்பதுடன், இழிதகு நிலையில் தமிழரைப் பிராமணர்க்கு அடிமைப் படுத்தியிருப்பதாலும், பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதிமுறை மிகத்தவறானதென்றும், திருக்குறளை அதிற் சேர்த்தது அதினும் மிகத்தவறானதென்றும் அறிந்துகொள்க.

திருக்குறளைக் கடைக்கழகக் காலத்து அம்மை வனப்பு நூலென்று கொள்வதே தக்கதாம்.

10. பாயிர விளக்கம்

"ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே"


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:08:31(இந்திய நேரம்)