தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 7 -

குணக்கடல்: - குணங்களுக்குக் கடல் போன்றவன்; (அனந்த ஞானாதி) குணங்கள் நிறையப் பெற்றவன்; வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, ‘அலகையில்லாக் குணக்கடலே.’ ‘குணக்கடல்’ ‘இன்பநிறை கடல்‘1 என்று திருத்தக்க தேவரும், ‘பகரலாக் குணக்கடலே‘2 என்று உதீசிதேவரும் கூறியுள்ளதை அறிக. வெவ்வினை(யின்) விலகி என இயைக்க. வெவ்வினை; ஈண்டுக் காதிவினை. வீடு-கைவல்யநிலை; மோஷம். வீடு

பெறுவதற்காகவே கடவுளை வணங்குவது. இதனை,

பொன்குண மாமணி பூந்துகிலாதி பொருளடியேன்
முன் கொணர்வீரென்று மோகிக்கிலே னிந்தமூவுலகமும்
நன்குணர் கேவல நாயகரே முன்பு யானுடைய (றதே3)
வெண்குணம் யான்பெற வெம்பெருமானை யிரக்கின்

என்று கூறியதனா லறிக.

மலர், ஈண்டுத் தாமரையையுணர்த்தும்; ‘பூவெனப்படுவது பொறிவாழ்பூவே‘ என்றது காண்க. சேவடி - செம்மை அடி; திருந்திய திருவடி யெனினுமாம். ‘ வெவ்வினை விலகி மாமலர் இலகும் சேவடி‘ என இயைத்து,

வெவ்வினை விலகியவுடன் தேவ ரியற்றிய பொற்றாமரையின்மேல் விளங்கி ஏகும் சிறந்தபாதம் எனினும் அமையும். ‘மலர்மிசை யேகினான்‘ (குறள். 3), ‘மலர்மிசைநடந்த மலரடி’ (சிலப்.நாடுகண். 204), எனப்பலவிடத்தும் வருவன அறிக. வெவ்வினை - பண்புத் தொகை; வெவ்வினைவிலகி - ஐந்தாம் வேற்றுமைத் தொகை. (1)

2.
நாத னம்முனி சுவ்வத னல்கிய
 
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் 4கின்றநாள்
 
ஏத மஃகி யசோதர னெய்திய
 
தோத வுள்ள மொருப்படு கின்றதே.

 

1
சீவக. 1244, 2813, 375
2
திருக். 31.
3
திரு¸£, 36.
4
தீ்ர்த்தன்செல்.

 


புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:20:41(இந்திய நேரம்)