தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 55 -

யோசனை நீளமுள்ள புலால் நாறும் யாக்கை யுடைய மீன்பிறவியிலும், புக்கு வீழ்ந்து-புகுந்து தோன்ற, நங்களை வந்து கூடி நடந்தன-நம்மை வந்து கூடியிருந்து அழிந்தவுடம்புகள், அனந்தம் அன்றோ-எண்ணற்ற வல்லவோ.

விலங்கு கதியில் அணுவளவுள்ள மிகச் சிறிய உடம்பு முதற்கொண்டு, ஆயிரம்யோசனையளவுள்ள பெரிய மீன் வரையிலுமுள்ள பல பிறவிகளிலும் நாம் பிறந்து அழிந்தவுடம்புகள் அனந்த மல்லவோ என்றா னென்க.

அயங்கம்-அஸங்க்யாதம் என்பதன் திரிபு.  அங்குலியயங்கம் பாகம்-அங்குலத்தினை அசங்க்யாதபாகம் செய்ததனாலுண்டானது.  அசங்க்யாதம்-ஸங்க்யை யில்லாதது; எண்ணற்றது.  இச்சொல் இங்ஙனம் வழங்குதலை‘ அங்குலியயங்கம் பாகம்‘ எனவும், ‘அயங்கியங் கடலுந்தீவும்‘ எனவும் (மேரு. 101, 6.)வாமனமுனிவர் கூறுவதனாலு மறிக. அணு முறை பெருகி - அணுவளவினின்றும் முறையே பெருகி.  பெருகுதல்-ஒரு பொறிமுதல் ஐம்பொறி வரைபெருகுதல். ஈரைஞ்ஞூறு - இரண்டு ஐந்நூறு; ஆயிரம். புகை-யோசனை.

கடல் எல்லாவற்றிற்கும் கடைசியிலுள்ளது சுயம்புரமணக்கடல் என்றும், அதிலுள்ள மீன் ஆயிரம் யோசனை நீளமுள்ள தென்றும், பதார்த்த சாரம், லோகசூடாமணி, திரிலோக ப்ரஜ்ஞப்தி முதலிய நூல்களும், மேரு. 78,இன். உரையும் கூறுகின்றன.                   (34)

 “
மலைவுறு திமிங்கிலப்பே ரானையை விழுங்கு மீனா
 
மலைதிமி ங்கிலகிலந்தான் மற்றதை விழுங்கு மீனே”

என வருஞ் சூடாமணி (3; 71) நிகண்டாலும்,

“தேசமு நூலுஞ் சொல்லுந் திமிங்கில கிலங்களோடு மாசையை யுற்ற வேலை கலங்க” என்னும்(கம்ப, சுந்தரகடறாவு 37) செய்யுளாலும், மற்றும் பிங்கலநிகண்டு முதலியவற்றானும் சிறிதும் பெரிதுமாகிய பலவகை உண்டென்பதை அறியலாகும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:53:16(இந்திய நேரம்)