Primary tabs
(இ-ள்.) மன்னனாகிய மாமயில் - யசோதர மன்னானயிருந்த அழகிய மயிலானது, மாளிகை - மாளிகையில், தன்னின்முன் எழுவாருக்கு - (முன்பு) தனக்குமுன் எழுந்திருக்கும் ஏவலர்க்கு, முன் - முன்னதாக, தான் எழா-(இப்பொழுது) தான் எழுந்திருந்தும், தன்னை அஞ்சினர் தங்களை - முன் தன்னைக் கண்டு அஞ்சிய ஏவலரைக் கண்டு தான் வெருண்டு - (இப்பொழுது) தான் அஞ்சியும், இன்ன ஆற்றின் வளர்ந்திடுகின்றது - இம்முறையில் வளர்ந்துவருகின்றது. (எ-று.)
மயில், அஞ்சி வளர்ந்திடுகின்ற தென்க.
யசோதரன், தன் அரண்மனையிலேயே மயிலாய் வளர்தலின், ‘தன்னின்... தான் வெருண்டு‘ என்றார். “அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும், எச்சமில” என்றதனால் ஈண்டு இரண்டாம் வேற்றுமை அச்சப்பொருளில் வந்தது. எழா - எழுந்து; செய்யா வென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். (6)
(இ-ள்.) அம் சில் ஓதியர் - அழகிய சிலவாகிய ஓதியையுடைய மகளிர், அடி தைவர - பாதங்களை வருட, பஞ்சி மெல் அணை பாவிய - பஞ்சினாலமைத்த மெல்லிய அணையை விரித்த, பள்ளிமேல் - படுக்கையின் மேல், துஞ்சம் மன்னவன் - கண் உறங்கிய வேந்தனாகிய, மாமயில் - சிறந்த மயில், பூமிமேல் - (இப்பொழுது) தரையிலேயே, அஞ்சி-
1 மாமயில்.
2 வாருக்கு.
3 வெகுண்டு.