Primary tabs
தாயைப் புணர்ந்த (யசோதரனாகிய) ஆணாட்டின் உயிர் தன் விந்துவில் சார்ந்தது என்க. பாய்ந்தது வன்தகர் ஆதலின் இது இறந்தது. (28)
(இ-ள்.) தாய் வயின் கருவுள்போய் - (யசோதரன்) தாயிடத்துக் கருவில் சார்ந்து, தகராய் அது வளர்ந்துழி - மீட்டும் ஆணாடாகிக் கருமுற்றி வளர்கையில், பூமுடி மன்னவன்- அழகிய முடியணிந்த யசோமதி, மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்- அமைந்த வேட்டைமேல் விரும்பிச் சென்று மீள்பவன், தாயை - (கருமுற்றிய) தாய் ஆட்டினை, தான் வாளியின் உயிர் போக்கினான் - தானே தன் கை அம்பினால் கொன்றான். (எ-று.)
கரு முற்றிய ஆட்டை மன்னன் கொன்றானென்க. தாய் வயின் - தாயிடத்தே; வயின், ஏழனுருபு. (29)
(இ-ள்.) ஆளிமொய்ம்பன் - சிம்மம்போலும் வலிமையுள்ளவனான யசோமதி, நீள நின்ற புலைக் குலத்தோன்தனை - சிறிது தொலைவில் நின்ற புலையனை விளித்து,
1 வாளினிற்றன்னுயிர்.
1 வாளின்(184)