Primary tabs
நான்காஞ் சருக்கம்
---:: ::---
(இ-ள்.) செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள் செறிந்த சோலையில், திருமணி வண்டும் - அழகிய நீலமணிபோலும் வண்டினமும், தேனும் - தேனினமும், கொந்துகள் - பூங்கொத்துக்களை, குடைந்து - --,கூவும் -கூவுகின்ற, குயிலொடு - --, குழுமி ஆர்ப்ப - சேர்ந்து ஒலிக்க, தென்றல் - --, செந்துணர் அணைந்து - பூங்கொத்துக்களிலுள்ள தாதுக்களில் படிந்து, திசை திசைசென்று வீச - திசைதோறும் சென்று வீச, வளர்மதுப் பருவம் -இளவேனிற் பருவம், வந்து - வந்துதனால், எங்கும்- எவ்விடத்தும், உளம் மகிழ்ந்தது - உயிர்களின் மனம் மகிழ்ந்தது.
இளவேனிற்பருவம் வந்ததென்க.
புதைந்த - அடர்ந்த. தேனும் வண்டும் வேறு வேறுஇனம். சீவக. 892 இன் உரை பார்க்க. வசந்த காலத்தில்மாவின் மொட்டுக்களைத் தின்று குயில் கூவுவதனால், ‘கொந்துகள் குடைந்து கூவுங் குயில்‘ என்றார்.யத்கோகில: கில மதௌ மதுரம் விரௌதி, தத் சாரு சூத கலிகா நிகரைக ஹேது‘ பக்தாமரம். 6. புனைந்த என்றும் பாடம்.
உளம் - உயிர்களின் உள்ளம். அளைதல் - படிதல். (1)
1 தழை.
2 னிசோமதி.
3 வண்டர்.