Primary tabs
மன்னன், நடனமாதராடும் நாடகத்தைக் கண்டும் பாடல்மகளிர் பாடும் இசையைச் கேட்டும் இனபுற்றானென்க.
பாடகம் - மகளிர் காலணி: ‘நல்லார் பாடகம்‘ (சீவக,510) ‘பாடகத் தாமரைச் சீறடி பணிந்து‘ (மணி, 25, 85). கேழ் - நிறம். சூடகம் - கைவளை: ஹஸ்தகங்கணம். (3)
(இ-ள்.) மன்னன் - --, வளையவர் சூழல் உள்ளால் - வளையணிந்த மகளிர்கூட்டத்திடையில், மனம் மகி்ழ்ந்து இருப்ப - மனங்களித்திருக்க, தளை அவிழ் தொடையல் மார்பன் - கட்டவிழ்ந்து மலர்ந்த பூமாலையணிந்த மார்பினையுடையவனான, சண்ட முன் கருமன் - சண்ட கருமன், வளம் மலர் வனத்துள் - வளவிய மலர் செறிந்த வனத்தினுள், போகி - சென்று, தீய மனிதரோடு - தீவினைபுரியும் (கள்ளர் முதலிய) மனிதரோடு, அனைய சாதி - அவரை யொத்த துஷ்ட மிருகங்களையும், களைபவன் - போக்கிக்காவல் புரிபவன், கண்ணில் - கண்ணெதிரில், கடவுள் - (யோகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு) முனிவரனை, கண்டு- --, கை தொழுது - கைகுவித்து வணங்கி. நின்றான் - தாழ்ந்து நின்றான். (எ-று.)
மன்னவன் மகிழ்ந்திருக்க, காவல் புரியும் சண்டகருமன், தீயன அகற்றி வருங்கால் கடவுளைக் கண்டானென்க.
தளை - கட்டு. தளையவிழ்தல் - கட்டவிழ்தல்: முறுக்கவிழ்தல். தொடையல், தொடுத்துக் கட்டும் மாலை. சண்டம் என்ற பதம் முதலிலுடைய கருமன் - சண்டகருமன்; ‘அபயமுன்னுருசி ‘ யென்றது போல்வது. இராசமாபுரத்துச் சண்டகருமன் (22) வேறு, இவன் வேறு, கடவுள் - முனிவன்: ‘கடவுள் தே முனி நன்மைப் பேர்‘ என்பது நிகண்டு. ‘கொல்லாத விரதத்தார்தங் கடவுளர் கூட்டமொத்தார்‘ என்றார்கம்பரும். சண்டகருமனால் நீக்கப்பட்டன, கள்ளர், புலி முதலியன என்று வடமொழிக்காவியம் கூறும். (4)