தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 275 -

லியல்பு.  அதிர்தல் - நடுக்குதல்.  ‘அதிர்வும் விதிர்வும்நடுக்கஞ் செய்யும்’ தொல்).  கோள் - வலிமை.  ஐம்பதின் இரட்டி - நூறு:  இதனை, ஐந்தினால் பொருத (பெருக்க) வந்த தொகை: ஐந்நூறு.  இனி, ஐந்தை ஐம்பதில் பெருக்கி இரட்டித்ததுவுமாம்.  ‘உடன் சென்று கவர்க’  என மாறுக.  இனி, உடன் - ஒருங்கே யெனவுமாம்.  நந்துதல் -வளர்தல்: மிகுதல்.  ‘பெரியவர் கேண்மை பிறைபோல...நந்தும்‘ (நாலடி.125). கைமாறு கருதாமையின், ‘அருள் மழை பொழியும் நாதன’ என்றார்.  நாதன் - பவ்யர்களுக்கு நாதன்.  (39)

259. 
அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்
 
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
 
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
 
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.

(இ-ள்.) அறப் பெருமை செய்துஅருள் - திருவறத்தின் பெருமையை அனைவர்க்கும்) உபதேசம் செய்தருள்கின்ற. தவப்பெருமை தன்னால் - தவத்தின் பெருமையினால், உறப் புணர்தல் அஞ்சி - (அவர்) அருகில் அணுகுவதற்குப் பயந்து, ஒருவிற்கண் - (சுற்றிலும்) ஒரு வில்லளவு தொலைவில், அவை - அவ்வேட்டை நாய்கள்.  நிற்ப - சூழ்ந்து நிற்க.  கறுப்பு உடை மனத்து எழு கதத்து - (க்ருஷ்ண லேஸ்ய பரிணாமமென்ற)  கறுத்த எண்ணமுடைய மனத்தே எழுந்த கொடுங் கோபத்தால், அரசன் - --, ஐயோ - --, மறப்படை விடக் கருதி -  கொல்லும் ஆயுதத்தை அவர்மேல் செலுத்த எண்ணி, வாள் உருவுகின்றான்- உறையினின்றும்) வாளை யுருவலானான். (எ-று.)

நாய்கள் அஞ்சி விலகி நிற்பதைக் கண்ட அரசன், தானே கொல்லக் கருதி வாளை உருவினானென்க.

வில், நீட்டலளவை,  கறுப்பு உடை மனம்  - கரு நிறம்வாய்ந்த எண்ணம்.  வடமொழியில் க்ருஷ்ணலேஸ்யை யென்பர்.  மனத்தின் எண்ணங்கள் விரிவகையால் பலவிதமாயினும். தொகைவகையால் ஆறுவகையாகும். அவை:-




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:29:13(இந்திய நேரம்)