Primary tabs
மலைக்குலக்கொடி 1141; அகிலமீன்றளித்த மாது 1143; கோதி லாவமு தனையவள் 1144; மாது 1142; வண்டுவார்குழல் மலைமகள் 1145; பிறப்பொழிப்பாள் 1146; காளமேக மொப்பாள் 1156; அந்தமில்லறம் புரப்பவள் 1260; ஆண்டநாயகி 1161; திருமறைகள் ஒலிக்குந் தெய்வ, வண்காஞ்சி யல்குல் மலைவல்லி 1163; கொந்தலர்பூங் குழலியமக் கொம்பு 1164; நிறைதவஞ்செய் இமையப்பாவை 1170; துணைவி 1203; தேவர்கடம் பிராட்டி 1227.
உருத்திரசோலை - 1161. காஞ்சிபுரத்தில்உள்ள அற்புதத் தானங்களுள் ஒன்று.
உருத்திரம் - 1030. திருவுருத்திரம். வேதங்களின் சரி நடுவில் உள்ள மந்திரப் பகுதி. பக்கம் - 1342 பார்க்க. அருமறைப் பயனாகிய உருத்திரம் 1037; உருத்திரம் 1036, 1039; வேதமந்திரம் 1038.
உலகாணி - 1150. திருக்காமக்கோட்டத்தில் உள்ள அற்புதத் தீர்த்தங்களுள் ஒன்று. (பக்கம் - 1479)
எச்சதத்தன் - 1215. விசாரசருமனாரென்னும் சண்டீசரின் தந்தை.
எயினனூர் - 608. ஏனாதிநாத நாயனாருடைய ஊர். தலவிசேடம் பார்க்க. (பக்கம் 823)
எரி - 797. தீக்கடவுள்.
எறிபத்தர் - 551, 556, 570, 591, 594, 604, 607. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
எழுத்தஞ்சும் - 1214. ஸ்ரீபஞ்சாட்சரம் - சிவமூலமந்திரம்.
ஏயர்பெருமான் - 881. ஏயர்கோன்கலிக்காம நாயனார். அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர். ஏயர்கோனார் 884. கலிக்காமர் 899. ஏயர்குலமன்னவனார் 900. மானக்கஞ்சாறரது புதல்வியாரின் கணவனார்.
ஏனாதிநாதனார் - 609, 614, 618, 632, 644, 649. ஏனாதிநாதர் 607; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
ஐயரே! - 1070. திருநாளைப்போவாரைத் தில்லைவாழந்தணர் விளித்தது.
ஐயர் - 719. திண்ணனார். (2) இறைவனார் 776.
கஞ்சாறூர் - 866. தலவிசேடம் (பக்கம் 1161) பார்க்க. கஞ்சாறு 871.
கடைகாப்போர் - 577. அரசரது அரண்மனை வாயிற்காவலர்.
கணமங்கலம் - 903. அரிவாட்டாய நாயனாரது ஊர். தலவிசேடம் (பக்கம் 1190) பார்க்க.
கம்பைமாநதி - 1137. தொண்டை நாட்டின் ஆறுகளுள் ஒன்று. காஞ்சிபுரத்தின் தீர்த்தங்களுள் ஒன்று. (பக்கம் 1460)
கரிகாற் பெருவளத்தோன் - 1162. பெரும்புகழ்கொண்ட சோழ அரசர். காஞ்சிபுரத் திருநகரங்கண்டவர். இமயமலையில் புலிக்கொடி நாட்டியவர்.
கருநாடர் - 978. கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவன் மன்னன் 978; 991. தமிழ்நாட்டின் வடக்கில் கருமண் ணிலப்பரப்புள்ள தேசம் கருநாடு எனப்படும்.
கருவூர் - 552. சோழ மன்னர்களின் தலைநகரங்கள் ஐந்தனுள் ஒன்று. தலவிசேடங் காண்க. (பக்கம் 768). இதன் ஆறு ஆகிய ஆம்பிரநதி என்பது சங்க நூல்களில் வழங்கப்படும் ஆன் பொருனை என்பதன் மரூஉ என்பர்.
கலயனார் - 830. கலயர் 835, 848, 850, 852, 854, 856, 858, 865. குங்குலியக்கலய நாயனார். அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர்.
கலிகைமாநகர் - 1096. இது தக்கோலம் என்றும், திரு ஊறல் என்றும் வழங்கப்படும். தொண்டை நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1419)