தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


அற்புதத் தேவாரத் திரட்டும்
45

 

மெய்யுந் தலமிசை விழுமுன் பெழுதரு
         மின்றாழ் சடையொடு நின்றாடு
மையன் றிருநட மெதிர்கும் பிடுமவ
         ரார்வம் பெருகுத லளவின்றால்.

167

1433.

இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
         "வென்றெய் தினை?" யென மன்றாடு
மத்தன் றிருவருள் பொழியுங் கருணையி
         னருள்பெற் றிடவரு மானந்த
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
         பாடிப் பின்னையு மென்மேலுஞ்
சித்தம் பெருகிய பரிவா லின்புறு
         திருநே ரிசைமொழி பகர்கின்றார்.

168

- தேவாரம்

கோயில் - திருவிருத்தம்

ஒன்றி யிருந்து நினைமிக் ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவர்க்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
"என்றுவந் தா"யென்று மெம்பெரு மான்றன் திருக்குறிப்பே.

2

கோயிற்றிருநேரிசை - பண் கொல்லி

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
யெத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.

1

8. திருச்சத்திமுற்றம் - திருவடிசூட்ட வேண்டுதல்

- புராணம்

1459.

"கோவாய் முடுகி" யென்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன்
 பூவா ரடிக ளென்றலைமேற் பொறித்து வைப்பா" யெனப்புகன்று
 நாவார் பதிகம் பாடுதலு நாதன் றானு "நல்லூரில்
 வாவா" வென்றே யருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.

194

- தேவாரம்

திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை; போகாவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

1

9. திருநல்லூர் - திருவடி தீக்கை

- புராணம்

1460.

நன்மைபெரு கருணெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழந் தெழும்பொழுதி
லுன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோ மென்றவர்தஞ்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

195

1461.

"நனைந்தனைய திருவடி யென் றலைமேல்வைத் தா"ரென்று
 புனைந்ததிருத் தாண்டகத்தாற் போற்றிசைத்துப் புனிதரரு

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 13:29:18(இந்திய நேரம்)