அணியன - அணிமையைச் செய்வன - தருவன. "தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே யேற்றுந் தகையன" (இன்னம்பர் - திருவிரு - 7), "ஏணிப் படி நெறி யிட்டுக் கொடுப்பன" (13), "விடாத தொண்டர்க் கணியன" (திருவையாறு - திருவிரு - 3), "பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும், ஏணியை யிடர்க் கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும், தோணியை" (திருவாவடுதுறை - தாண்ட - 4) என்பனவாதி தேவாரங்கள் இங்கு நினைவுகூர்தற்பாலன.