தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


 
வெள்ளை ஒரு சாவலைத்தான்
வெள்ளி நல்ல கிழமையிலே
நள்ளிரவு வேளையிலே
நடுச்சாம நேரத்திலே
மன்னவனே கேக்குராண்டா
மாதர் துன்பம் தீர்ப்பதற்கு
இன்னையிலே இருந்து
வன்பிணிகள் தீர்ப்பதற்கு
கொடுத்தேன் திருநீறு நான்
கொத்தளத்து வாழ் கறுப்பன்
நெற்றியிலே நீறு பூசி
நினைந்து வா எத்தனைத்தான்
உந்தன் நோய் அகற்றி வாரேன்
உண்மையுள்ள கறுப்பனிப்போ
சொன்னபடி நடந்தாயானால்
துன்ப வினை தீர்த்துத்தாரேன்
என்னப்பா மன்னவனே
இதற்கும் பதில் கேளு
எந்தனுடன் அட்சரத்தை
ஏழை வரிந்து தாரேன்
மண்டலத்துப் பூசைக்குத்தான் மங்கை
எந்தனுக்குப் பூசை செய்ய
ஏழை கொடுத்தாயானால்
முக்காலும் சத்தியமாய்
முன்னின்று காத்துத்தாரேன்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:57:47(இந்திய நேரம்)