Primary tabs
அத்தை மகன்முறை
அவளுக்கு அவன் அத்தை மகன் முறை. இருவரும் காதலித்துக் கூடுகிறார்கள். அத்தைமகன் அவளோடு கொஞ்சிப் பேசுகிறான். கிண்டலும் கேலியும் கலந்து அவளை வாயடைத்து வெட்கித் தலைகுனிய வைத்துவிட முயலுகிறான். பேச்சில் அவனுக்கு அவள் அடங்கவில்லை. அத்தைமகன் முறையாலே சற்று வாயை அடக்கிகொள்ளுவதாகச் சொல்லிக்கொண்டே அவன் வாயை அடக்கப் பார்க்கிறாள். போட்டியில் வெற்றி இருவருக்கும்தான் !
மல்லியப்பூ சேலைக்காரி
நீ இறைக்கும் தண்ணியிலே
மல்லியப்பூ மணக்குதடி!
அரைக் கிணத்து உப்புத்தண்ணி
செம்புக் குடத்துத் தண்ணி
சேருறது எந்தக் காலம்?
பொதுக் கடை போடயில
நீ வாடி செவத்தப் புள்ள
உனக்குழக்கு நெல் தாரேன்
நேரான பாதை வேணும்
ஜோடி மட்டம் ரெண்டு வேணும்
சொகுசா வழி நடக்க
மார்புக் கேத்த ரவிக்கை தாரேன்
கொஞ்சி விளையாடி உனக்கு
குழந்தை கையிப் புள்ள தாரேன்
கருப்பட்டியும் சேர்த்திடிச்சு
தின்னு ருசி கண்டவரே
தின்னக் கூலி கட்டிடுவேன்
அதுல ரெண்டு செவலக் காளை
செவலக் காளை விலை பெறுமோ
குமரிப் புள்ள கைவிளைவி?
குறும்பு பேசும் மச்சானே
அத்தை மகன் முறையாலே
அடக்கிக் கொண்டேன் மையலிலே
சுங்கொடிச் சேலைக்காரி
கண்டு என்னப் பாராமல்
சூதமாகிப் போனாயடி
மனசிலயும் எண்ணாதிங்க
சூதமாகிப் போறாமிண்ணு
சூசகமாச் சொல்லாதிங்க
அதன் நடுவே செய்வரப்பு
செய்வரப்புப் பாதையிலே
தேனமிர்தம் உண்கலாமோ?
மெத்த மையல் கொண்டவரே !
ஆத்தில் தலைமுழுகி-உங்க
ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.
வட்டார வழக்கு: சூதமாகி-கள்ளத்தனமாய்.
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி
இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.