தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


முறைப் பாட்டு

அத்தை மகள் பேசவில்லை !

அவன் நிலக்கடலை விதைத்திருக்கிறான். கடலை மகசூல் கண்டதும் கையில் பணமிருக்கும். அத்தை மகளைக் கலியாணம் செய்து கொள்ளுவான். இது அவன் கனவு.

ஆனால் மழை பொய்த்து கடலை காய்ந்து விட்டது. அவன் கவலை தேங்கிய முகத்தோடு வயலருகே உட்கார்ந்திருந்தான். அத்தைமகள் அவ்வழியே போனாள். அவன் மேல் அவளுக்கு ஆசைதான். இன்று அவள் வயலருகில் போனதை அவன் பார்க்கவில்லை. அவளுக்கு கோபம் வந்து விட்டது, நேராகப் போய்விட்டாள். பின்னர்தான் அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தன்னிடம் பேசாமல் போவதையும் அதன் காரணத்தையும் உணர்ந்தான்.

தன் அன்பையும் தெரிவிக்க வேண்டும். தன் கவலைக்குக் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். உடனே அவள் காதில் கேட்கும்படி பாடத் தொடங்குகிறான்.

ஆண்:
பண்டாரம் தோட்டத்திலே
பருத்திக் களை வெட்டயிலே
ஒத்த வழி ஓடி வர
அத்தை மக பேசலியே
ஆமணக்குத் தோட்டத்திலே
பூமணக்கப் போற புள்ளே
பூமணக்கும் வாடையிலே-நானும்
புருஷமினு வந்துட்டேனே
வாகை மரத்துப் புஞ்ச
வட்டாரச் சோளப் புஞ்ச
தங்கம் விளையும் புஞ்ச
தரிசாக் கிடக்குதடி
காட்ட உழுது போட்டேன்
கடலை போட பட்டம் பாத்தேன்
வந்த மழை போகுதில்லை
வருணனே உனது செயல்

 

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:17:07(இந்திய நேரம்)