தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பெண் அழைப்பு

தென்னையும் வாழையும் கட்டி அலங்கரித்த பந்தலிலே மணப்பெண்ணை அழைத்து வந்து உட்கார வைக்கிறார்கள்.

கல்யாணம் கல்யாணம்
காரிழைக்குக் கல்யாணம்
என்னைக்குக் கல்யாணம்
இளங்கொடிக்கு கல்யாணம்
சித்திரை மாதத்திலே
சீர்பாகம் தேதியிலே
ஞாயிறு திங்களுக்கு
நல்ல புதன்கிழமை
கல்யாண மென்று சொல்லி
கடலேறிப் பாக்குமிட்டார்
முகூர்த்தம் நடக்குதிண்ணு
முடிமன்னர்க்குப் பாக்குமிட்டார்
ஐம்பத்தாறு அரசர்க்கும்
அருமையாய் சீட்டெழுதி
வாழைமரம் பிளந்து
வாசலெல்லாம் பந்தலிட்டார்
தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டார்
பந்தல் அலங்கரித்து
பாவையை உட்காரவைத்தார்

சேகரித்தவர் :
சடையப்பன்

இடம் :
கொங்க வேம்பு,
தருமபுரி.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:30:50(இந்திய நேரம்)