தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வேழ முகனை
வினாயகனைத் தானழைத்து
சந்திரரும் சூரியரும்
சபையோர்கள் தானறிய
இந்திரனார் தோழனை
இணைநோக்கி நின்ற பின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டு
செல்வ வினாயகரை
பாங்காகக் கைதொழுது
பரி செய்யப் போறமென்றாள்
போதவே பால் வார்த்து
போசனமும் முடித்த பின்னர்
மாதாவிடம் சென்று
மகனும் விடை கேட்க
போய்வா மகனே என்று
போற்றி மனுக்கொடுத்தார்
பேரண்டி முழுங்க
பெரிய நாதர் தானடிக்க
பூமி அதிர
புல்லாங்குழல் ஊத
எக்காளம் ஊத
எதிர்ச்சின்னம் முழக்கமிட
ஊர் மேளம் பறை மேளம்
உரும்பு துடும்படிக்க
துத்தாரி நாகசுரம்
ஜோடி கொம்பு தானூத
வலம்புரி சங்கு
வகைவகையாய் ஊதிவர
சேகண்டி மல்லாரி
திமிர்தாளம் பம்பை
பம்பை பேரணி
அமளிகள் கேட்டு
பல்லக்கு முன்னடக்க
பாரிலுள்ளோர் சூழ்ந்துவர
வெள்ளைக் குடைகள்
வெண் சாமரம் வீசிவர
விருதுகள் சுழற்றி
சூரிய வானம்போல்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:31:59(இந்திய நேரம்)