தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பேயனுக்கு வாழ்க்கைப் பட்டேன்

பல ஊர்களில் அவளுக்கு முறை மாப்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் பெண்ணின் அழகை மதித்து பெண் கேட்டனர். ஒர ஆண்டு கழியட்டும் என்று பெண்ணின் பெற்றோர் திருமணத்தைத் தள்ளி வைத்தனர். அதற்கும் ஒப்புக்கொண்டு மறு ஆண்டிலும் கேட்டனர். அவளுக்கு ஒரு மாமன் மகன் மீது ஆசை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பணம் இருக்கிறதென்று எண்ணி, ஒரு பேயனுக்கு அவளைக் கட்டி வைத்து விட்டனர். அவன் அவளைப் படாதபாடு படுத்தினான். அவள் தாய் வீடு திரும்பினாள். தன் மாமன் மகனைக் கண்டாள். அவளுடைய மனக்குறை அவனுக்குத் தெரியும்படி பாடுகிறாள்.

முக அழகைப் பாத்துக்கிட்டு
முத்தையாபுரத்தில் கேட்டாங்க
பல்லழகைப் பாத்துக்கிட்டு
பாண்டியா புரத்தில் கேட்டாங்க
வாயழகைப் பாத்துக்கிட்டு
வல்ல நாட்டில் கேட்டாங்க
காலழகைப் பாத்துக்கிட்டு
கைலாசபுரத்தில் கேட்டாங்க
மாட்டேன் இன்னு சொன்னதுக்கு
மறு வருசமும் கேட்டாங்க
மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமி இருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாக்கைப் பட்டு
பெரும் கஷ்டத்துக்கு ஆளாச்சே !

குறிப்பு : முத்தையாபுரம், பாண்டியாபுரம், கைலாசபுரம், வல்லநாடு-தூத்துக்குடிக்குச் சிறிது தூரத்திலுள்ள ஊர்கள்.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம்,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:34:33(இந்திய நேரம்)