தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


காய்க்காத தென்னை

(மலடி)

வாசக் கருவேப்பிலே
வாங்கி வச்ச தென்னம் பிள்ளே
மட்டை புடிக்கு மின்னு
மரநெருங்கக் காய்க்கு மின்னு
நா மவுந்தேன் சில காலம்
மட்டை புடிக்காமே
மர நெருங்கக் காய்க்காமே
நா மாபாவி ஆனேனப்பா !
கோயில் கருவேப்பிலே
கொண்டு வந்த தென்னம் பிள்ளே
கொன்னை புடிக்கு மின்னு
கொலை நெருங்கக் காய்க்குமின்னு
நா குளிந்தேன் சில காலம்
கொன்னை புடிக்காமே
கொலை நெறையக்காய்க்காமே
நா கொடும்பாவி ஆனேனப்பா !

வட்டார வழக்கு : நா-நான் ; மவுந்தேன்-மகிழ்ந்தேன் ; குளிந்தேன்-குளிர்ந்தேன்.

உதவியவர் : நல்லம்மாள்
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி

இடம் :
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:37:04(இந்திய நேரம்)