தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


புளியா மரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
பொங்கிக் கொண்டு
அண்ணா போரேனடா
ஆத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
அள்ளி நல்லா அண்ணாடா
சொருகி கிட்டு
குளத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
கூட்டி நல்லா அண்ணாடா
எறிஞ்சேனடா
கூடுவாளா அண்ணாடா
உன் மகளும்
கொண்டு செல்ல
அண்ணாடா ஆகுமோடா
சித்தெறும்பா என் மகன்
வேசம் மாறி
சிறை எடுக்க அண்ணாடா
வருவானடா
ஆட்டையும் அண்ணாடா
உன் பட்டியுமே
நாச மத்து அண்ணாடா
போகாதா
பாம்பாக அண்ணாடா
என்மகனும்-உன் மகள்
பஞ்சணைக்கு அண்ணாடா
வருவானடா

வட்டார வழக்கு: நாசமத்து-நாசமாய்.

சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம் :
சேலம் மாவட்டம்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:39:24(இந்திய நேரம்)