தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


புளியா மரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
பொங்கிக் கொண்டு
அண்ணா போரேனடா
ஆத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
அள்ளி நல்லா அண்ணாடா
சொருகி கிட்டு
குளத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
கூட்டி நல்லா அண்ணாடா
எறிஞ்சேனடா
கூடுவாளா அண்ணாடா
உன் மகளும்
கொண்டு செல்ல
அண்ணாடா ஆகுமோடா
சித்தெறும்பா என் மகன்
வேசம் மாறி
சிறை எடுக்க அண்ணாடா
வருவானடா
ஆட்டையும் அண்ணாடா
உன் பட்டியுமே
நாச மத்து அண்ணாடா
போகாதா
பாம்பாக அண்ணாடா
என்மகனும்-உன் மகள்
பஞ்சணைக்கு அண்ணாடா
வருவானடா

வட்டார வழக்கு: நாசமத்து-நாசமாய்.

சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம் :
சேலம் மாவட்டம்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:39:24(இந்திய நேரம்)