தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சுரண்டைதே நீர்க்குளம் சாத்தூர் வட்டகை முதல்
அகிலாண்ட புரம் ஒட்ட நத்தம்
அருங்குளம் பிறவும்-பின்னும்
சிவனணஞ்சபுரம்-நயினா பட்டிக் கிழங்கு
சேர்ந்த நாகலா புரம் கடலை வரதம் பட்டி
இத்தனை ஊரும் தெரியாமல்
இனம் சொல்லா ஊரும்
ஐயோ! எங்கும் கொள்ளைகள் ஐயோ
எந்தன் பிள்ளைகள் ஐயோ
என்று கூக்குரலோடு நின்று பரதவித்து
ஐயோ என்பாரும் கடவுளை நொந்தார் எல்லோரும்
அல்லாவை வேண்டி சலாபம் செய்து
நெல்லையப்பர் கடை வழி
விசுவ நாதர் கோயில் சன்னதிக்கு வர
விளைந்ததே கூட்டம்
பயந்து விலகினார் ஓட்டம்
அப்போது
வீரன் குடிமகன் சக்கணனும் அந்த
வேளையிலே ரதம் ஏறி
ஒய்யாரமாய் வேட்டை எழுப்ப
முத்து மகன் கூட்டம் குளப்ப
அந்நேரம் வேகமாக
பின் வந்து வழி கூடி
வந்தார் எல்லோரும்-கடவுளை
நொந்தார் எல்லோரும்

வட்டார வழக்கு: நாடாக்கமார்-நாடார்கள்; நாட்டன்-Norton என்னும் வழக்கறிஞர்.

குறிப்பு: இது இரு கட்சியாரையும்-நாடார், மேல் சாதியாரையும் சேராத நடுநிலையார் பாடல்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:42:54(இந்திய நேரம்)