தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


விசிறி கொண்டுவா

கணவன் சோம்பேறியாக அலைந்தான். மனைவி, அழாத குறையாக அவனை வேலைக்குப் போகும்படி வேண்டுகிறாள். ஆனால் அவனோ, அவள் சொல்லைக் கேளாமல் ஆற்று மணலில் சூதாடி காலம் கழிக்கிறான். மாலை நேரமானதும், வீட்டுக்கு வந்து சாப்பிட உட்காருகிறான். மனைவி அவனுக்கு எதுவும் பரிமாறவில்லை. அந்நேரத்தில் அடுப்பங்கரையிலிருந்து, அவனது மனைவி பாடுகிறாள்.

ஆத்து மணலிலே
கோட்டைக் கட்டி
அஞ்சாறு மாசமா
சண்டை செஞ்சு
வேத்து முகம் பட்டு
வாராரோ துரை
வெளிச் சுங்கெடுத்து வீசுங்கடி

வட்டார வழக்கு: சுங்கு-விசிறி.


சேகரித்தவர்:
கவிஞர் சடையப்பன்

இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:47:03(இந்திய நேரம்)