தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


அங்குமிங்குமுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்குக் கீழே சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக, உழவர்கள் பள்ளத்திலுள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காகப் பனையோலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப் பெட்டிகளைப் பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும், கயிறுகளைக் கட்டிப் பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இவ்வேலை மிகவும் சலிப்பைத் தருவதாயினும் வேலையின் பயனை எண்ணி அவர்கள் நீண்ட நேரம் உழைப்பார்கள். சலிப்புத் தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவுக்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடுவார்கள்.

நீரை மடையிலேற்றுவதற்கு வேறொரு கருவியும் உள்ளது. அதன் பெயர் இறைவை மரம். ஒரே மரத்தைத் தொட்டி போல் குடைந்து ஒரு ஓரத்தில் கைப்பிடிபோல் அமைத்திருப்பார்கள். அதன் நடுவே கயிற்றைக் கட்டி முக்காலி போல மூன்று கம்புகளைத் தரையில் நாட்டி அதனோடு, இறைவை மரத்தை இணைப்பர். இறைவை மரத்தின் தொட்டி போன்ற பகுதி தண்ணீரினுள் இருக்கும் கைப்பிடியை மேலும் கீழுமாக அசைத்தால், தண்ணீர் பெட்டியினுள் ஏறி மடையினுள் பாயும். இறைவை மரத்தை இயக்க ஒரே ஒரு ஆள் போதும். இப்பாடல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகுதியாக பாடாப்படுகிறது. தென்னாற்காடு மாவட்டத்திலும் காலால் மிதித்து ஏற்றம் இறைப்பவர் ஏற்றப் பாட்டுப் பாடுவர். மேலே ஒருவன் ஏற்றத்தை மிதிக்க கீழே ஒருவன் நின்று கிணற்றிலிருந்து வெளிவரும் வாளியைத் தூக்கித் தண்ணீரை மடையில் செலுத்துவான். ஏற்றத்தின் மேலுள்ளவன் முதலடியைப் பாடி முடித்தப்பின் கீழேயுள்ளவன் அடுத்த அடியைப் பாடுவான். அப்பாடல்களில் சில விடங்களில் பாரத இராமாயண பாத்திரங்கள் வருவர்.

இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஏற்றப் பாட்டுகள் பொருளைவிடச் சந்தமே முக்கியமாகத் தருகிறது. பிள்ளையார் வழிபாடு, காதல் பிதற்றல்கள், திருவிழா வர்ணனைகள், உடல்வலி தோன்றாமலிருக்கக் கடவுளை வேண்டுதல் முதலிய பல பொருள்கள் தெளிவில்லாமல் குழம்பி வருகின்றன. நட்டபயிர் விளைய வேண்டும், அறுவடைக்குப் பின் திருவிழாக்கள் நடக்கவேண்டும், திருவிழா விளையாட்டுகளில் கவலையெல்லாம் மறக்கவேண்டும் என்ற இன்ப ஆர்வம் ஏற்றப் பாட்டுகளில் பொதுவாக இருப்பதைக் காணலாம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:50:45(இந்திய நேரம்)