தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


6

சிலுவை வரைந்து கொண்டேன்
திருப்பாதம் தெண்டனிட்டேன்
கன்னி மேரி மாதாவே
கர்த்தா வே காத்தருளும்
காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு
கைக் குழந்தை வேணுமின்னு
தெற்கே திருப்பதியாம்
தேவ மாதா சன்னதியாம்
மறப் பதில்லை திருப்பதியை
மனப் பாட்டு முனைக் குருசை
குருசே உனைத் தொழுவேன்
கும்புடுவேன் ஆதரிப்பாய்
வேளையிது வேளையம்மா
வேளாங்கண்ணி மாதாவே
மாதாவே உன்னுதவி-உன்
மகனுதவி வேணுமம்மா
தாயே உனதடிமை
தற்காக்க வேணுமம்மா
நண்டு படும் தொண்டியடா
நகர படும் நம்புதாளை
நம்பிக்கை உண்டுமம்மா
நமக்குதவி நாயனுண்டு
நாயன் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
நமக்குப் படைகளுண்டு
நாத சுரக் காரருண்டு
பிச்சிச் சரமோ-நீ
பின்னி விட்ட பூச்சரமோ
பூவைச் சொரிந்தவள் நீ
போன வழி வாராளடா
பச்சை மணக்குதடி
பாதகத்தி உன் மேலே
எல்லை கடந்தாளடி
இலங்கை வனம் கடந்தாள்
தில்லை வனம் கடந்தாள்
திருவணையும் குற்றாலம்
பாராமல் போராளடி
படமெடுத்த நாகம் போல

வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு ; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு ; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு ; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு ; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள் ; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள் ; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.

குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.

சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ்
அனுப்பியவர்: S.S. போத்தையா

இடம் :
தூத்துக்குடி,



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:58:13(இந்திய நேரம்)