தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


ஆசையுண்டோ?

மங்கலப் பொருள்கள், மணம் வீசும் நறுமலர் இவையாவும் அவளுக்கு விருப்பமானவை. கணவன் இறந்ததும் இவற்றிற்கெல்லாம் இனி எனக்கு ஆசையுண்டோ? என்று கேட்கிறாள். கணவன் இறந்ததும் ஆசைகளும் இறந்துவிட வேண்டியதுதான். அது தான் சமூகச் சட்டம்.

பத்தடுக்குத் தாம்பாளம்
பால்காப்பி நெய்த்தோசை
பாத்துப் பலுமாற-அய்யோ
பத்துமணியாகும்
பத்துமணியாகும்-அய்ய
பத்தரையும் பாசாகும்
எட்டடுக்குத் தாம்பாளம்
எடுத்துவைத்த நெய்த்தோசை
எடுத்துப் பலுமாற-ஐயா
எட்டு மணியாகும்
எட்டு மணியாகும்
எட்டரையும் பாசாகும்
கோட்டை வாசலிலே
கொழுந்து வந்து விக்குதிண்ணு
கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக்
கொழுந்து மேல் ஆசையுண்டோ
தெக்குக் கோட்டை வாசலில
செவந்தி வந்து விக்குதிண்ணு
சீமானத் தோத்தேன்-எனக்குச்
செவந்தி மேல் ஆசையுண்டோ
வடக்குத் தலை வாசலிலே
மருவு வந்து விக்குதுண்ணு
மன்னவரத் தோத்தேன்-எனக்கு
மருவு மேல் ஆசையுண்டோ
அஞ்சு படித் துறையும்
அத்தருடன் பன்னீரும்-நான்
அள்ளிக் குளிப்பாட்ட-நான்
அகலத்தாள் ஆயிட்டேனே !
தோட்டம் படித்துறையும்
துறைமுகத்துப் பன்னீரும்
தொட்டுக் குளிப்பாட்ட-நான்
பொன்பதிச்ச மேடையில-நான்
பொன்பதிச்ச மேடையில
போக வர நீதியில்ல
காச்ச முருங்க
கல் பதிச்ச மேடையிலே
கல் பதிச்ச மேடையிலே-நான்
காலு வக்க நீதியில்ல
அரிராமர் கோட்டையில
அல்லி ஒரு பெண் பிறந்தாள்
அல்லி படும் பாதரவை
அருச்சுனரே பார்க்கலியோ

வட்டார வழக்கு: பலுமாற-பரிமாற ; தோத்தேன்-இழந்தேன் ; மருவு-மருக்கொழுந்து ; குளிப்பாட்ட-கணவனைக் குளிப்பாட்ட ; அல்லி-தன்னைக் குறிப்பிடுகிறாள் ; பாதரவு-துன்பம்.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம் :
சிவகிரி,நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:58:53(இந்திய நேரம்)