Primary tabs
மறைந்தோடி ஏன் போனீர்?
மாமனார் இறந்து போகிறார், அவருடைய பிள்ளைகளிடையே சண்டை சச்சரவு ஏற்படாமல், எல்லோருக்கும் புத்தி சொல்லி குடும்பத்தை சீராக நடத்தச் சொன்னார் அவர். பேரக் குழந்தைகளை ஆதரித்துப் புத்தி கூறினார். அவர் இறந்ததும், அவருடைய குடும்பத் தலைமையைப் புகழ்ந்து மருமகள் ஒப்பாரி சொல்லுகிறாள்.
வளர்த்தும் சமர்த்தர்களே
வல்லாமைக் காரர்களே
பிள்ளைகளை ஆதரிச்சே
வந்த புண்ணியர்க்குப்
புத்தி சொன்னீர்-நீங்கள்
பிள்ளைகளை வீதி விட்டு
பிரிந்தோடி முன் போனீர்
மக்களை ஆதரிச்சீர்
மன்னவர்க்கே புத்தி சொன்னீர்
மக்களைக் கடத்தி விட்டு
மறந்தோடி ஏன் போனீர்
வட்டார வழக்கு: புண்ணியர், மன்னவர்-இவளுடைய கணவனைக் குறிக்கும்.
குறிப்பு : முதலிரண்டு அடிகள் மாமனாரை அழைக்கும் விளி.
உதவியவர்
:
ஜானகி
சேகரித்தவர்:
கு.சின்னப்ப பாரதி
இடம்:
சேலம் மாவட்டம்.